Wednesday, 2 May 2018

இதயம் தழுவிய ஈரக்காற்று

அன்று இரவு
அம்மாவாசை தான்
இருப்பினும்
நிலவும்
நட்சத்திரமும்
தோன்றியது

தொலைவில் சென்ற பேருந்தில் 
இருந்து
ஊரைப் பார்த்தபோது
ஒளிரும் விளக்குகள்
நட்சத்திரமாய் ஜொலிக்க
அதன் அழகை கண்டு
ஜன்னல் கம்பியில் தலை சாய்க்க
இரவு நேர ஈரக்காற்று
இதமாய் தழுவியது
இதயத்தை



இளைஞனே வா



இளைஞனே வா! வா! 
இமயம் தொடுவோம் வா! வா! 
இல்லை என்ற வார்த்தை 
இதயம் சொல்லிடலாமா!

உயிர் மூச்சை உதறி தள்ளு 
வாய்மை மட்டும் வெல்லும் 
உலகுக்கு உரக்க சொல்லு 

சாதிகளையெல்லாம் ஓரங்கட்டி 
சமத்துவம் செய்வோம் வா! வா!

இல்லை இங்கு ஏழை 
வறுமை வந்த வலி திரும்பும் 
திசையெங்கும் மொனங்கள் பெருகும் 
நம் ஒற்றுமை கண்டு உருகும் 
மனங்கள் உண்டு 

ஒன்றுபட்டு உழைத்தால் 
கானல் நீரல்ல கனமழைதானே!
நம்மால் முடியும் வா! வா! 
இன்றே முடியும் வா!வா!