Monday, 10 December 2018

கறுப்பு

இன்று சமூகத்தால் எதிர்ப்புக்காக மட்டும் பயன்படுத்தப்படும் நிறமாக உள்ள கறுப்பு நிறத்தை வைத்து எழுதும் கவிதை


எதிர்ப்பு என்ற பெயரில் உன்னை 
எடுத்துக்காட்டும் மூடர்கள் 
Related image
கருவிழி கறுப்பபானதால் 
அதைத் தோண்டி எடுப்பாரோ ?

தலைமயிர் கறுப்பு என்பதால் 
பிடுங்கி எறிவாரோ ?

உடல்நிறம் நீயானதால் 
முகத்தில் சாயம் பூசுவரா?

தமிழனின் உண்மை நிறமாய் 
நீ இருக்கிறாய்

ஏனைய நிறங்களை ஏங்கவிடும் 
தலைவனும் நீதான் 

அரசியல் கட்சிக்கொடிகளின் 
அரசனும் நீதான் 

இருளுக்கு உரிமையான 
உன்னைக்கண்டு அஞ்சி ஓடும் 
இவர்கள் 

உனக்கு தேசியக்கொடியில் 
இடம் தராத வருத்தம் 
ஒன்றுதான் என்னை 
வாட்டுகிறது. 






5 comments:

  1. All lines are super... But the para of
    "anchi oodum ivargal"
    was placed in the after 5th paragraph..
    I think, this was suitable..waht is your opinion Reply

    ReplyDelete
  2. Sorry spelling mistake. What

    ReplyDelete