Tuesday, 22 January 2019

தேவதையே !

ஒருகணம் நீ திரும்பிப்பாராடி
என்னை நான் மறந்துபோகிறேன் 
என்னை நீ பிரிந்துசென்றால் 
இப்போதே இறந்து  போகிறேன் 
Image result for தேவதையே !


வலிகளில் கொடியது
 காதல்வலி 
எனக்கு நீ தந்துவிடாதே 
சுகத்தில் சிறந்தது
காதல்சுகம் 
எனக்கு நீ தராமல்பபோகாதே! 

உன் கருவிழி கரம்பற்றி 
கடலை கடந்து செல்வேன் 
இருவிழி இமைகள் பிடித்து 
இமயத்தை ஏறிச்செல்வேன் 

உடல்குருதி முழுதும் 
உன்பெயரை எழுதிவைத்தேன் 
உலகத்து வானம்  முழுதும் உன்புகழை 
பொரித்து வைப்பேன் பார்!

பிறர்பசி தீர்க்க உன்கையில் 
அட்சயபாத்திரம் இருக்கு 
என்துயர் நீக்க உன்மனதில் 
என்ன மந்திரம் இருக்கு சொல்!

Image result for தேவதையே !ஆசையோடு உன் 
தோளில் சாய்ந்தேன் 
தயைப்போல் நெஞ்சில் 
தாங்கினாய் 

உன் கூந்தல் புதரில் 
சிக்கிக்கொண்டேன் 
பூவைப்போல் தலையில் 
தாங்கினாய் 

கண்ணான கண்ணே உன்ன 
கண்ணாக பாக்கணும் 
பொன்னான பெண்ணே உன்ன 
பொன்போல காக்கணும் 

உன் கரண்டக்கால் கொலுசுசத்தம் 
காற்றில் பறந்து 
ஊரெல்லாம் கச்சேரி பாடுதடி !

பாட்டைக்கேட்க என்மனம் 
ஆசையாய் பின்னால் ஓடுதடி!



Friday, 18 January 2019

நட்பு

நான் சறுக்கி விழும்போது என்னை
Related imageதாங்கிப்பிடிப்பது நீயே!
என்னை நேசித்த உறவும் நீயே!
எனக்கு ஏற்ற உறவும் நீயே !

பூக்கள் வாசம் வீசாமல் போகலாம்
சூரியன் உதிக்காமல் போகலாம் '
நிலவும் குளிர்வீசாமல் போகலாம்
பருவமழையும் பொய்த்து போகலாம்
ஆயின் ஒருபோதும் மாறாது
என் நண்பனின் நட்பு 

வார்த்தை இல்லை இனி
தமிழில் உன்னைப்பற்றி சொல்ல
வாழும் காலம் யாவும்
உன் நட்பு என் எண்ணந்தோறும்

நான் தனித்துநின்ற தருணங்களில்
உன் நட்பு கருணைக்கைகளை காட்டியது
எங்கோ சென்று மறைந்தது என்
வேதனையின் நகல்கள்   

Friday, 4 January 2019

காதலியே



கனல்விழி கண்ணகி உன் 
கண்களில் தெரிகிறாள் 
மாந்தளிர் மேனியாள் மாதவி 
உன் மேனியிள் தெரிகிறாள் 

உன்னை எண்ணி
நொடிப்பொழுதும் 
பாடும் ஏழைக்கவிஞன் நான்

என்னைவிட அகவையில்
Image result for 96 movie
குறைந்த நீ
அழகில்
பெரியவளானாய்

இருக்கட்டும்
முத்தை அடைகாக்கும்
சிப்பிக்குள் நீ இருக்கிறாய்
உன்னை வெளிக்கொணரும்
வேள்வியில் நான் இருக்கிறேன்

வானத்தை பிரியாத
மேகமாய் உன்மனம்
அந்த மேகத்தில் ஒரு
மழைதுளியாய்
சேர விரும்புகிறேன்

கண்ணன் வரும் வேளையில்
காத்திருந்த ராதையாக
Image result for பெண்ணேஇந்த மன்னன் வரும்
வேளையில் காத்திருப்பாயா?

தெய்வம் ஒரு கண்திறந்தால்
ஏழைக்கு ஒரு வழிபிறக்கும்
நீ உன் கண்திறந்தால்
எனக்கு ஒரு வாழ்வு பிறக்கும்

எட்டாத உயரத்தில் நிலவை
வைத்தவன் எவனோ?
என் எதிரில் நிற்கும்
இந்த நிலவை படைத்தவன்
எவனோ?

அவன் என்
கையில் கிடைத்தால்
சிற்பம் செய்த
கைகளுக்கு சிலம்பு
வாங்கி சூட்டுவேன்

சூரியனை ரெண்டு துண்டாக
கொண்ட கண்கள்
ஆபரணம் அணியாத கழுத்து
ஆடம்பரம் காணாத ஆடை
அழகுக்கும் அழகு சேர்க்கிறது

நுனிமூக்கிலும் அழகு
முத்துப்பல் சிரிப்பிலும் அழகு
இரு இதழ் சிவப்பிலும் அழகு
உன் அழகைக்கண்டு சித்தன்னவாசல்
சித்திரமும் சிலிர்த்துக்கொள்ளும்

இராமன் எய்திய அம்பு
மராமரத்தை துளைத்தது
உன்னைப்பற்றிய நினைவுகள்
என் எண்ணத்தில் நுழைந்தது

என் மாமனுக்கு மகளே!
அன்புத்தாய்க்கு மருமகளே!
அருமைத் தங்கைக்கு சம்மந்தியாரே!
நீ
ஒவ்வொருவருக்கும் ஒரு முறையாக இருக்க
எனக்கென்ன முறை உண்டு சொல்லடி!

இரத்தத்தைக் கக்கி
Image result for 96 movieபித்தத்தை ஏற்கும்
நீ ஒரு
வயதிற்கு வந்த வெண்ணிலா



வெண்ணிலாவே உன்னிடம்
என் காதல் சொல்ல
தயங்குகிறேன் பாரடி!