Wednesday, 28 March 2018

தரையில் வானம்

   


ஒருவன் நமக்கு மேலே இருக்கும் வானத்தை நம்கூடவே இருப்பதாக நினைத்து எழுதும் ஒரு படைப்பு

மண் இருப்பது தரையில்தான்
     மனிதன் இருப்பதும் தரையில்தான்
மரம் இருப்பதும் தரையில்தான்
     மக்கள் இருப்பதும் தரையில்தான்

நாம் பிறந்த சில மாதத்தில் தரையில் தவழ்கிறோம்
     வளர்ந்து பெரிதாகி வானில் பார்க்கிறோம்
விண்ணை ஆய்வு செய்யும் விண்வெளி நிலையம் உண்டு 
     மண்ணை வளப்படுத்த விவசாய தொழிலும் உண்டு 

வானம் பூமியை அடைய  வாய்ப்பில்லை 
      பூமி வானத்தை அடைய வாய்ப்பில்லை 
ஆனால் ஒரு வழியில் வானம் நம்மிடம் வருகிறது 
     அதுதான் மழை வழியாக 


நாம் மழைநீரை தொடும்போது 
     வானத்தை தொடுவதாக உணர்கிறோம் 
வானம் என் வீட்டில் என்று 
     புகழ் பாடுகின்றோம் 

ஆதலால் வானம் இருப்பதும் தரையில்தான் 
     வான் நிலவு இருப்பதும் தரையில்தான் 
தரையில் வானம் என்று சொல்வதில் ஐயமில்லை

என் மனதில் பதிந்த இந்தியா



எங்கள் தேசம் இந்தியா
இனிய தேசம் இந்தியா
மூன்று பக்கம் கடல்
நான்கு பக்கம் புகழ்
கொண்ட தேசம் இந்தியா

ஒற்றுமையின்  இலக்கணம் இந்தியா
இயற்கையின் இருப்பிடம் இந்தியா
போர்வீரரின் பிறப்பிடம் இந்தியா
கல்வியின் கல்வெட்டு இந்தியா

கங்கை யமுனா பாயும் தேசம் இந்தியா
காவிரி பாய்ந்து செழிக்கும் தேசம் இந்தியா
வைகையை வணங்கும் தேசம் இந்தியா
வாகைசூடும் வல்லமை தேசம் இந்தியா


காந்தி நேரு பிறந்த நாடு இந்தியா
அண்ணா அம்பேத்கார் வளர்ந்த நாடு இந்தியா
பாரதி போற்றும் உயர்ந்த நாடு இந்தியா
பலமொழிகள் பேசும் பரந்த நாடு இந்தியா

நேர்மை இதன் நேசம்
வாய்மை இதன் வாசம்

உண்மை இதன் உறைவிடம்
தாய்மை இதன் தலைமையிடம்

வீரம் இதன் பிறப்பு
வெற்றி இதன் சிறப்பு

அறிவே இதன் ஆக்கம்
உளவியல் இதன் ஊக்கம்

கருணை இதன் கருவிழி
இரக்கம் இதன் இருவிழி

அகிம்சை இதன் அருமை
சுதந்திரம் இதன் பெருமை

வந்தே!  மாதரம்

Tuesday, 27 March 2018

எங்க ஊரு வெட்டிமடம்

எங்க ஊரு நெடுங்குளம். என்னங்க தெரியாத ஊரோட பெயரா இருக்கா. ஆமாங்க என் ஊரு ஒரு சின்ன கிராமம். எங்க ஊருல மொத்தம் 3000 மக்கள் இருக்காங்க. அதுல ஆண்கள் 1750 மற்றும் பெண்கள் 1250. எங்க கிராமத்தில் நான் இருக்கக்கூடிய தெரு பெயர் யாதவர் தெரு. எங்க தெருவுல பிள்ளையார் கோவில் ஒன்று உள்ளது.

அங்கதாங்க இளவட்ட பயனுவோ எல்லோரும் ஒண்ணுகூடுவோம். எல்லா நாளுமே இங்க ஒரு கூட்டம் இருக்கும். அந்த கூட்டத்தோட பெயர் வெட்டிக்கூட்டம் . அவுங்க இருக்கும் அந்த இடத்தையும் இப்போ வெட்டிமடம் என்று அனைவரும் கூறுகிறார்கள் 

பிள்ளையாரும் இவர்களின் பேச்சைக்கேட்டு கேட்டு அவரும் வெட்டி பிள்ளையாராக மாறிவிட்டார். ஒருபக்கம் அரசியல், மற்றொருபக்கம் அடுத்தவர்களின் கதை, சிரிப்பு என்ற பெயரில் சிலர் கடுப்பு ஏத்துவது. அனைத்தும் அங்கு நடக்கும்.


சிரித்துவாளா வேண்டும்
   பிறர் சிரிக்க வாழ்த்திடாதே!
   
என்ற பாடல் வரிகளுக்கு அர்த்தம் தெரியாமல் ஒருவர் காமெடி செய்ய அனைவரும் சிரிப்பது அங்கு ஒரு கலைவிழா போன்று இருக்கும்.

ஒருவனை அவன் முகத்தை பார்த்து பேசாமல், அவன் சென்ற பிறகு அவனது முதுகை பார்த்து பேசும் கொலைகளும் அங்கு இருப்பார்கள்.

இவ்வேட்டிமடத்தில்  இருப்பவர்கள் பள்ளி சிறுவர்களையும் தன்னுடன்  சேர்த்து வைத்து அவர்களுக்கு தேவை இல்லாத கதைகளை கூறுவார்கள்.
வெட்டிமடத்தில் பேசும் ஒன்றும் பயன்தரக்கூடியதாக இருக்கவே இருக்காது.

விடுமுறை விட்டால் போதும் அணைத்து சிறுவர்களும் அங்கே கூடுவார்கள். வாழ்க்கைக்கு பயன்தரக்கூடிய எந்த செயலிலும் அவர்கள் ஈடுபடுவதில்லை. அனைத்தும் பொழுதுபோக்கு சார்ந்ததாகவே இருக்கும். ஒருவனை தூண்டிவிட்டு வேடிக்கை பார்க்கும் வேலையும் அங்கே நடக்கும்.

இலக்கு இல்லாத மனிதன்
      கூடைச்சாம்பலுக்கு  சமம்!

என்பதை அறியாத இவர்கள் எந்த இலக்குகளும் இல்லாமல் இருப்பது இவர்களை காலம் எப்படி உயர்த்தும். வெட்டிமடம் இருப்பதால் எவரும் உயரமுடியாத நான் அந்த கூட்டத்தை திட்டமிடவிருக்கிறேன்.

எனது தெரு உயருவதற்கு நல்லவழிகளை உருவாக்க தொடங்கிவிட்டேன்.
அதுபோல நீங்களும் நல்ல காரியங்களை உங்கள் அருகில் இருப்பவர்களுக்கு செய்து பாருங்கள் .






நெடுங்குளம் வந்து சேராத மணிமுத்தாறு தண்ணீர்

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் தாலுகாவிற்கு உட்பட்ட கிராமம்தான் நெடுங்குளம் ஊராட்சி. அந்த ஊருக்கு நெடுங்குளம், வேலென்புதுக்குளம், இலுப்பைக்குளம், மதகனேரிகுளம் என்ற நான்கு குளங்கள் உள்ளன.

 கடந்த பருவமழையின் காரணமாக திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அணைத்து அணைகளும் நிரம்பியது. இதில், மணிமுத்தாறு அணையின் இரண்டாவது கால்வாய் நாங்குநேரி, காரியண்டி, ஊர் வழியாக நெடுங்குளம் வந்து சேருகிறது. கடந்த ஜனவரி மாதம் முதலமைச்சர் அணைகளிலிருந்து தண்ணீர் திறந்துவிட உத்தரவிட்டார்.

 அதன்படி, மணிமுத்தாறு அணையிலிருந்து இரண்டாவது கால்வாயில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. இருப்பினும் நெடுங்குளத்திற்கு தண்ணீர் வந்து சேரவில்லை. காரியண்டி வரை  வந்தது. தண்ணீர் கொடுக்கவேண்டிய கிராமங்களுக்கு கொடுக்காமல் ஏறுக்கு மாறாக மற்ற கிராமங்களிடம் பணம் வாங்கிக்கொண்டு தண்ணீர் கொடுக்கிறார்கள். 

எங்கள் கிராமத்திற்கு தண்ணீர் வராததால் நாங்கள் ஆட்சியரிடம் மனு கொடுத்தோம். எந்த பதிலும் இல்லை. பத்திரிக்கைகளில் செய்திகளாக வெளியிட்டோம் ஏறெடுத்து பார்க்ககூட இல்லை. இதனால் ஏராளமான ஏக்கர் நெல்வயல்கள் தண்ணீர் இல்லாமல் கருகின. விவசாயிகள் அனைவரும் கடன்பட்டுவிட்டனர். 

அவ்வூர் விவசாயி ஒருவர் கூறுகிறார்.  நா! நாற்பது மறைக்கப்பாடு நட்டேன். ஆனால், அதில் விளைந்தது வெறும் ரெண்டு மறைக்கப்பாடு மட்டும்தான்.
இதனால், நான் அரசாங்கத்திடம் சொல்வது ஒன்று மட்டும்தான் என்வயிற்றில் அடித்த மாதிரி வேறு எந்த விவசாயியின் வயிற்றிலும் அடித்துவிடாதீர்கள் என்று !

அந்த விவசாயியின் அழுகுரல் என்காதில் இன்னும் கேட்டுக்கொண்டிருக்கிறது. இந்த ஒரு விவசாயி மட்டுமல்ல. அந்த கிராமத்தைச் சேர்ந்த பல விவசாயிகள் இப்படி அழுதுகொண்டிருக்கிறார்கள்.

விவசாயி அழமட்டும்தான் செய்யமுடியும் என்ற நிலை வந்துவிட்டது.
ஊருக்கே சோறுபோடும் விவசாயி இன்று பிச்சை எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறான். இதற்க்கு முழுமுதற் காரணம் அரசாங்கம். 

ஒவ்வொரு கைப்பிடி.... சோறு உண்ணும்போதும் !
இவர்களை... நினைத்து பாருங்கள் !
உங்களுக்கு விவசாயியின் அருமை தெரியும். 


மழையே !!!
என்னை நிரப்பி விடு.
வான மகள்
தன் முகத்தை
பார்த்து மகிழட்டும்.

என்ற கவிதை ஒரு விவசாயி சோகத்துடன் கூறிய ஒரு கவிதை.