ஒருவன் நமக்கு மேலே இருக்கும் வானத்தை நம்கூடவே இருப்பதாக நினைத்து எழுதும் ஒரு படைப்பு
மண் இருப்பது தரையில்தான்
மனிதன் இருப்பதும் தரையில்தான்
மரம் இருப்பதும் தரையில்தான்
மக்கள் இருப்பதும் தரையில்தான்
நாம் பிறந்த சில மாதத்தில் தரையில் தவழ்கிறோம்
வளர்ந்து பெரிதாகி வானில் பார்க்கிறோம்
விண்ணை ஆய்வு செய்யும் விண்வெளி நிலையம் உண்டு
மண்ணை வளப்படுத்த விவசாய தொழிலும் உண்டு
வானம் பூமியை அடைய வாய்ப்பில்லை
பூமி வானத்தை அடைய வாய்ப்பில்லை
ஆனால் ஒரு வழியில் வானம் நம்மிடம் வருகிறது
அதுதான் மழை வழியாக
நாம் மழைநீரை தொடும்போது
வானத்தை தொடுவதாக உணர்கிறோம்
வானம் என் வீட்டில் என்று
புகழ் பாடுகின்றோம்
ஆதலால் வானம் இருப்பதும் தரையில்தான்
வான் நிலவு இருப்பதும் தரையில்தான்
தரையில் வானம் என்று சொல்வதில் ஐயமில்லை
good
ReplyDelete