Tuesday, 18 December 2018

செருப்புக்கு ஒரு கடிதம்


செருப்புக்கு கவிதை வடிவில் ஒரு கடிதம்.

3flipflops.jpgஉன்னுடன் ஒரு பேட்டி எடுத்தவன்
மேத்தா
உனக்கு கடிதம் எழுதுபவன்
நான்

ஆதரவற்றவனுக்கு அன்னம்
இல்லாத தருணத்திலும்
உன்னை விற்க
ஆயிரம் விளம்பரங்கள்

உன்னை விற்பவன்
செல்கிறான் மகிழுந்தில்
உனக்கு மருத்துவம் பார்ப்பவன்
இருக்கிறான் தெருவீதியில்

சிலநேரங்களில் நீ
காணாமல் போய்விடுகிறாய்
கோவில் விழாக்களில்

ஒருநாள் உன்னை
காணமாட்டார்கள்
பாதயாத்திரை பக்தர்கள்

கைக்கிளை மேற்கொள்ளும்
தலைவனுக்கு தலைமகள்
எடுத்துக்காட்டும் எச்சரிக்கை
ஆயுதம் நீ

இருப்பினும் 
உன் மருத்துவன்
சமூகத்தில் உயரவேண்டும்
அடியேன் அன்புடன் கேட்கிறேன்        

Sunday, 16 December 2018

புயலே போய்விடு

போய்விடு ! போய்விடு!
புயலே நீ போய்விடு!

எங்கள் சாபம் உனக்கு வேண்டாம்
புயலே நீ போய்விடு

வேற்றுமையில் ஒற்றுமையாய் வாழும் 
எங்கள் இந்தியா
ஒற்றுமையை உருக்குலைக்க புயலே
நீ வந்தியா

கஜா என்ற உன் பெயரை உலகம்
உச்சரிக்க செய்தது ஏன்?
வரலாற்றில் இடம் பிடிக்கவா?

உன்னைக்கண்டு பணக்காரன்
மாடிவீட்டில் தங்கிவிட்டான்
நீ விட்ட பெருமூச்சில்
ஏழை குடிசையை பறிகொடுத்தான்

ஏழையின் அழுகுரல் உனக்கு
கேட்கவில்லையா?
இரக்கம்கொள்ள என்னவோ உனக்கு
இதயம் இல்லையா?

போய்விடு!போய்விடு!
புயலே நீ போய்விடு!

உன்னுடன் பிறந்த உறுப்பினர்
எத்தனையோ
எங்களிடம் உறவுகொள்ள
உண்னிடம் இழப்பதற்க்கோ
எங்களிடம் ஒன்றுமில்ல

நிவாரணம் என்ற பெயரில்
எம் தலைவர் பணமழையில் நீந்துகிறார்
பேரிடர் என்ற பெயரில்
நாங்களோ கண்ணீரில் நீந்துகிறோம்

போய்விடு!போய்விடு!
புயலே நீ போய்விடு! 



Monday, 10 December 2018

கறுப்பு

இன்று சமூகத்தால் எதிர்ப்புக்காக மட்டும் பயன்படுத்தப்படும் நிறமாக உள்ள கறுப்பு நிறத்தை வைத்து எழுதும் கவிதை


எதிர்ப்பு என்ற பெயரில் உன்னை 
எடுத்துக்காட்டும் மூடர்கள் 
Related image
கருவிழி கறுப்பபானதால் 
அதைத் தோண்டி எடுப்பாரோ ?

தலைமயிர் கறுப்பு என்பதால் 
பிடுங்கி எறிவாரோ ?

உடல்நிறம் நீயானதால் 
முகத்தில் சாயம் பூசுவரா?

தமிழனின் உண்மை நிறமாய் 
நீ இருக்கிறாய்

ஏனைய நிறங்களை ஏங்கவிடும் 
தலைவனும் நீதான் 

அரசியல் கட்சிக்கொடிகளின் 
அரசனும் நீதான் 

இருளுக்கு உரிமையான 
உன்னைக்கண்டு அஞ்சி ஓடும் 
இவர்கள் 

உனக்கு தேசியக்கொடியில் 
இடம் தராத வருத்தம் 
ஒன்றுதான் என்னை 
வாட்டுகிறது. 






Thursday, 11 October 2018

திசைமாறி பாயும் தாமிரபரணி

கடந்த சில நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்துவரும் கனமழையின் காரணமாக தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. வெள்ளத்தின் காரணமாக குறுக்குத்துறை கோவில் மூழ்கிவிட்டது.

தாமிரபரணி வெள்ளம் கிழக்கே தூத்துக்குடி கடலில் வீணாக செல்கிறது. அதை தடுத்து விவசாய பாசனத்திற்க்காக தண்ணீர் வழங்கலாம். ஆற்றிற்கு வடக்கே கோவில்பட்டி நோக்கி ஒருகால்வாய் வெட்டி வடக்கிலுள்ள கிராமங்களுக்கு தண்ணீர் வழங்கலாம். 

ஆற்றிற்கு தெற்க்கே கால்வாய் அமைக்க தேவையில்லை. ஏனென்றால், ஏற்கனவே ஒரு கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. அமைத்து என்ன பயன். ஒரு பயனும் இல்லை. தங்க நாற்கர சாலை கால்வாய்க்கு இடையில் செல்கிறது. 

அதில் ஒரு பாலம் அமைந்தால்தான் தண்ணீர் மேற்கிலிருந்து கிழக்கே செல்லும். நாற்கர சாலை அமைக்கும்போதே அதில் பாலம் அமைக்காமல் செயல்பட்டது நம் சீர்கெட்ட அரசு. மூன்றடைப்புக்கு தெற்க்கே உள்ள அந்த கால்வாயில் தயவுசெய்து பாலம் அமைத்து தரும்படி அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்கிறேன். 

ஏனென்றால் ஆந்த கால்வாயை நம்பி ஐந்தாயிரம் ஏக்கர் விவசாயநிலம் காத்திருக்கிறது. எனவே, வீணாக கடலில் சேரும் தாமிரபரணி தண்ணீரை கடலில் கலக்க விடாமல் விவசாயத்திற்கு வழங்குங்கள் என்று அரசிடம் கேட்டுக்கொள்கிறேன்.

நம் மாநிலத்திற்கு வடக்கே உள்ள கர்னாடக மாநிலம் தண்ணீரை சேமிப்பதற்கு ஏராளமான அணைகளை கட்டிவைத்துள்ளது. ஆனால், நம் தமிழ்நாடு அரசு?

தாமிரபரணியை சேமித்து வைக்க சேர்வலாறு அணை. காவிரியை  சேமித்து வைக்க மேட்டூர் அணை. இந்த இரண்டு அணையும் காமராஜர் முதலமைச்சராக இருந்தபோது கட்டப்பட்டுள்ளது. அவருக்கு பிறகு ஒரு அணைகூட கட்டப்படவில்லை.

இப்போது உள்ள அரசியல்வாதிகள் எல்லோரும் பணத்தை சேமிப்பதில் குறிக்கோளாக வைத்துள்ளார்கள். வேறுஎங்கிருந்து தண்ணீரை சேமிப்பார்கள். கர்நாடகா அரசு நமக்கு தண்ணீர் தருவதே அதிசயமாகத்தான் நடக்கும்.

Image result for கபினி அணையைதற்போது அங்கு பெய்து வரும் கனமழையால் தங்களுக்கு பாதிப்பு வந்துவிடக்கூடாது என்று கபினி அணையை முழுவதும் திறந்து விட்டனர்.

காவிரி தண்ணீர் முழுவதும் தமிழ்நாட்டை நோக்கி பாய்ந்து வருகிறது. ஆனால், அதை சேமித்து வைக்க ஒரு அணைகூட இல்லை.தாமிரபரணியை சேமிப்பது நம் அனைவரின் கடமை என்பதை உணரவேண்டும்.

'நீரின்றி அமையாது உலகு' என்ற வள்ளுவனின் வாக்குப்படி நாம் அனைவரும் மழைநீரை சேமிப்போம்.

Wednesday, 15 August 2018

தமிழ் எங்கள் இளமைக்குப் பால்


        


  தாய்மொழிக்கு நிகர் வேறுமொழிஇல்லை
 இன்பத்தமிழ் மொழிக்கு இணை ஏதும் உண்டோ!
 அகம் எங்கள் அன்பின் தொடக்கம்
 புறம் எங்கள் வீரத்தின் விளைநிலம்
 வள்ளுவனின் முப்பாலும்
 ஐம்பெரு ஐஞ்சிறு காப்பியத்தோடு
 உலக மொழிகளின் முதன்மைக்கும்
முதல் மனிதன் தோன்றியதற்கும்
உரிமை கொண்டது என் தமிழ்
பாரதி பாடிய பெண்விடுதலையும் 
பாரதிதாசன் அருளிய தமிழின் இனிமையும்  தமிழ்த்தேனாக  என் காதில் நுழைந்து
மனத்தேனாக  மகிழவைத்து
என் இளமைக்கு பாலாக இருந்து
அறிவை வளர செய்கிறது

Saturday, 9 June 2018

சுற்றுசூழல் பாதிப்பு பற்றிய கைகூ

Image result for கழிவுநீர்


குளத்தில் மாடுகள் குளிக்க 
பிறகு நாம் அதை குடிக்க 
பணமழையால் பெருகியது 
மருத்துவரின் சட்டைப்பை 


Image result for பாலிதீன்கழிவுநீர் எல்லாம் ஆற்றிலே 
ஆற்றுநீர் அனைத்தும் குடலிலே  
கழிவறையில் ஏற்பட்ட 
வெள்ளப்பெருக்கு 


பாலிதீன் பயன் 
ஒரு நிமிடம்
அது மக்க 
ஆயிரம் ஆண்டுகள் 


Image result for போர்வெல்போர்வெல் நிலத்தில் 
போர்செய்ய 
நிலநடுக்கம் பூமியில் 
நிமிர்ந்து நிற்கும் 


ஸ்டெர்லைட் நமது 
நண்பன் 
அணைத்து தீமையும் 
செய்கிறான்
Image result for ஸ்டெர்லைட்



















  

 

உயிரெழுத்தின் சிறப்பு

Image result for தமிழ்மொழி
















 
ம்மா என்ற அழகையும்
 
ண்டாள் அருளிச்செய்த திருப்பாவையும் 

 ரண்டாயிரம் ஆண்டு பழமையும் 
Image result for ஓளவையின்
தல் குணம் கொண்டதும் 

லக மொழிகளுக்கு முதன்மையாகவும்
 
க்கம் தரும் உயர்ந்த மொழியாகவும் 

ளிமையின் சிகரமாய் இருக்கும்
 
காரத்தைக்  கொண்டு அமையும்
 
ம்பெரும்காப்பியத்தை அள்ளித்தரும்
 
ட்டக்கூத்தன்  ஒப்பனை செய்யும்
 
வியத்தின் பிறப்பிடமாக திகழும் 
 
ஓளவையின் அறிவிலக்கியம் தமிழ்மொழி 

Wednesday, 2 May 2018

இதயம் தழுவிய ஈரக்காற்று

அன்று இரவு
அம்மாவாசை தான்
இருப்பினும்
நிலவும்
நட்சத்திரமும்
தோன்றியது

தொலைவில் சென்ற பேருந்தில் 
இருந்து
ஊரைப் பார்த்தபோது
ஒளிரும் விளக்குகள்
நட்சத்திரமாய் ஜொலிக்க
அதன் அழகை கண்டு
ஜன்னல் கம்பியில் தலை சாய்க்க
இரவு நேர ஈரக்காற்று
இதமாய் தழுவியது
இதயத்தை



இளைஞனே வா



இளைஞனே வா! வா! 
இமயம் தொடுவோம் வா! வா! 
இல்லை என்ற வார்த்தை 
இதயம் சொல்லிடலாமா!

உயிர் மூச்சை உதறி தள்ளு 
வாய்மை மட்டும் வெல்லும் 
உலகுக்கு உரக்க சொல்லு 

சாதிகளையெல்லாம் ஓரங்கட்டி 
சமத்துவம் செய்வோம் வா! வா!

இல்லை இங்கு ஏழை 
வறுமை வந்த வலி திரும்பும் 
திசையெங்கும் மொனங்கள் பெருகும் 
நம் ஒற்றுமை கண்டு உருகும் 
மனங்கள் உண்டு 

ஒன்றுபட்டு உழைத்தால் 
கானல் நீரல்ல கனமழைதானே!
நம்மால் முடியும் வா! வா! 
இன்றே முடியும் வா!வா!


Thursday, 12 April 2018

காவிரியை மீட்போம்

காவிரி தண்ணீரை மீட்டுக் கொண்டு வருவோம் என்று ஒரு தமிழன்
                                                        எழுதும் கவிதை

தமிழனுக்கு விவசாயம் ஒன்றுதான் ஆதாரம்
அந்த ஆதாரமோ இன்று அழியும்நிலையில்
அழியப்போகும் விவசாயத்தை அழியவிடுவோமோ !
ஆணித்தனமாக ஆதாரத்தை நிலைநாட்டுவோம்

காவிரியை மீட்டெடுக்க பரணி கொதிக்கிறது
காவிரியை கொண்டுவர வைகை துடிக்கிறது

விவசாயத்தை பாதுகாக்க வீதியிலே போராட்டம்
பணத்தை பெருக்கிக்கொள்ள விளையாட்டரங்கில்  சூதாட்டம்

விவசாயி துயர்  நீக்க எழுந்தது எங்க தமிழ்கூட்டம்
சுயநலமாய்  வாழுது இங்க ஒரு பெருங்கூட்டம்

விவசாயம் இல்லையேல் சோத்துக்கு என்ன செய்வாய்
விவசாயம் அழிந்தபின்னே பணத்தை திம்பயோ !

காமராஜர் இருந்திருந்தால் கண்கலங்கி நிப்போமோ!
உங்கள் கன்னத்தில் அறைந்து காவிரியை மீட்டிருப்போம்

தாரை தாரையாய்  விழும் மழையால் தண்ணீர்வந்தது
அதைத்தடுக்க  எவ்வாறு உனக்கு தைரியம் வந்தது ?

காவிரி தமிழ்நாட்டில் பாயவில்லையானால்
கர்நாடகாவில் எங்கள்  உழிஞை படை பாயும்

இன்று அகிம்சைவழி நடக்கும் இந்த அறப்போராட்டம்
நாளை ஆயுதம் ஏந்தும் அதிரடிப்போராட்டமாக மாறும்

 கர்நாடகாவில் நுழைந்து உங்களை களையெடுத்து
காவிரியை மீட்டுக் கொண்டுவருவோம் .

Wednesday, 28 March 2018

தரையில் வானம்

   


ஒருவன் நமக்கு மேலே இருக்கும் வானத்தை நம்கூடவே இருப்பதாக நினைத்து எழுதும் ஒரு படைப்பு

மண் இருப்பது தரையில்தான்
     மனிதன் இருப்பதும் தரையில்தான்
மரம் இருப்பதும் தரையில்தான்
     மக்கள் இருப்பதும் தரையில்தான்

நாம் பிறந்த சில மாதத்தில் தரையில் தவழ்கிறோம்
     வளர்ந்து பெரிதாகி வானில் பார்க்கிறோம்
விண்ணை ஆய்வு செய்யும் விண்வெளி நிலையம் உண்டு 
     மண்ணை வளப்படுத்த விவசாய தொழிலும் உண்டு 

வானம் பூமியை அடைய  வாய்ப்பில்லை 
      பூமி வானத்தை அடைய வாய்ப்பில்லை 
ஆனால் ஒரு வழியில் வானம் நம்மிடம் வருகிறது 
     அதுதான் மழை வழியாக 


நாம் மழைநீரை தொடும்போது 
     வானத்தை தொடுவதாக உணர்கிறோம் 
வானம் என் வீட்டில் என்று 
     புகழ் பாடுகின்றோம் 

ஆதலால் வானம் இருப்பதும் தரையில்தான் 
     வான் நிலவு இருப்பதும் தரையில்தான் 
தரையில் வானம் என்று சொல்வதில் ஐயமில்லை

என் மனதில் பதிந்த இந்தியா



எங்கள் தேசம் இந்தியா
இனிய தேசம் இந்தியா
மூன்று பக்கம் கடல்
நான்கு பக்கம் புகழ்
கொண்ட தேசம் இந்தியா

ஒற்றுமையின்  இலக்கணம் இந்தியா
இயற்கையின் இருப்பிடம் இந்தியா
போர்வீரரின் பிறப்பிடம் இந்தியா
கல்வியின் கல்வெட்டு இந்தியா

கங்கை யமுனா பாயும் தேசம் இந்தியா
காவிரி பாய்ந்து செழிக்கும் தேசம் இந்தியா
வைகையை வணங்கும் தேசம் இந்தியா
வாகைசூடும் வல்லமை தேசம் இந்தியா


காந்தி நேரு பிறந்த நாடு இந்தியா
அண்ணா அம்பேத்கார் வளர்ந்த நாடு இந்தியா
பாரதி போற்றும் உயர்ந்த நாடு இந்தியா
பலமொழிகள் பேசும் பரந்த நாடு இந்தியா

நேர்மை இதன் நேசம்
வாய்மை இதன் வாசம்

உண்மை இதன் உறைவிடம்
தாய்மை இதன் தலைமையிடம்

வீரம் இதன் பிறப்பு
வெற்றி இதன் சிறப்பு

அறிவே இதன் ஆக்கம்
உளவியல் இதன் ஊக்கம்

கருணை இதன் கருவிழி
இரக்கம் இதன் இருவிழி

அகிம்சை இதன் அருமை
சுதந்திரம் இதன் பெருமை

வந்தே!  மாதரம்

Tuesday, 27 March 2018

எங்க ஊரு வெட்டிமடம்

எங்க ஊரு நெடுங்குளம். என்னங்க தெரியாத ஊரோட பெயரா இருக்கா. ஆமாங்க என் ஊரு ஒரு சின்ன கிராமம். எங்க ஊருல மொத்தம் 3000 மக்கள் இருக்காங்க. அதுல ஆண்கள் 1750 மற்றும் பெண்கள் 1250. எங்க கிராமத்தில் நான் இருக்கக்கூடிய தெரு பெயர் யாதவர் தெரு. எங்க தெருவுல பிள்ளையார் கோவில் ஒன்று உள்ளது.

அங்கதாங்க இளவட்ட பயனுவோ எல்லோரும் ஒண்ணுகூடுவோம். எல்லா நாளுமே இங்க ஒரு கூட்டம் இருக்கும். அந்த கூட்டத்தோட பெயர் வெட்டிக்கூட்டம் . அவுங்க இருக்கும் அந்த இடத்தையும் இப்போ வெட்டிமடம் என்று அனைவரும் கூறுகிறார்கள் 

பிள்ளையாரும் இவர்களின் பேச்சைக்கேட்டு கேட்டு அவரும் வெட்டி பிள்ளையாராக மாறிவிட்டார். ஒருபக்கம் அரசியல், மற்றொருபக்கம் அடுத்தவர்களின் கதை, சிரிப்பு என்ற பெயரில் சிலர் கடுப்பு ஏத்துவது. அனைத்தும் அங்கு நடக்கும்.


சிரித்துவாளா வேண்டும்
   பிறர் சிரிக்க வாழ்த்திடாதே!
   
என்ற பாடல் வரிகளுக்கு அர்த்தம் தெரியாமல் ஒருவர் காமெடி செய்ய அனைவரும் சிரிப்பது அங்கு ஒரு கலைவிழா போன்று இருக்கும்.

ஒருவனை அவன் முகத்தை பார்த்து பேசாமல், அவன் சென்ற பிறகு அவனது முதுகை பார்த்து பேசும் கொலைகளும் அங்கு இருப்பார்கள்.

இவ்வேட்டிமடத்தில்  இருப்பவர்கள் பள்ளி சிறுவர்களையும் தன்னுடன்  சேர்த்து வைத்து அவர்களுக்கு தேவை இல்லாத கதைகளை கூறுவார்கள்.
வெட்டிமடத்தில் பேசும் ஒன்றும் பயன்தரக்கூடியதாக இருக்கவே இருக்காது.

விடுமுறை விட்டால் போதும் அணைத்து சிறுவர்களும் அங்கே கூடுவார்கள். வாழ்க்கைக்கு பயன்தரக்கூடிய எந்த செயலிலும் அவர்கள் ஈடுபடுவதில்லை. அனைத்தும் பொழுதுபோக்கு சார்ந்ததாகவே இருக்கும். ஒருவனை தூண்டிவிட்டு வேடிக்கை பார்க்கும் வேலையும் அங்கே நடக்கும்.

இலக்கு இல்லாத மனிதன்
      கூடைச்சாம்பலுக்கு  சமம்!

என்பதை அறியாத இவர்கள் எந்த இலக்குகளும் இல்லாமல் இருப்பது இவர்களை காலம் எப்படி உயர்த்தும். வெட்டிமடம் இருப்பதால் எவரும் உயரமுடியாத நான் அந்த கூட்டத்தை திட்டமிடவிருக்கிறேன்.

எனது தெரு உயருவதற்கு நல்லவழிகளை உருவாக்க தொடங்கிவிட்டேன்.
அதுபோல நீங்களும் நல்ல காரியங்களை உங்கள் அருகில் இருப்பவர்களுக்கு செய்து பாருங்கள் .